கரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 3,86,452 பேருக்குத் தொற்று: 3498 பேர் பலி

கரோனா பாதிப்பு புதிய உச்சம்; ஒரே நாளில் 3,86,452 பேருக்குத் தொற்று: 3498 பேர் பலி
Updated on
1 min read

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,84,814 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 1,53,84,418 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,97,540 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 31,70,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3498 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,08,330 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15,22,45,179 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 28,63,92,086 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,20,107 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in