Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

மாநில அரசுகளிடம் 1 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில மாநிலங்கள் கூறி வரும் நிலையில், மாநில அரசுகளிடம் 1 கோடிடோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மே 1 முதல்18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இந்நிலையில், போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால், மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கமுடியாத நிலை இருப்பதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை 16.16 கோடிடோஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.1 கோடி (வீணானது உட்பட) டோஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1.06 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளின் கைவசம் உள்ளன. மேலும் 20.48 லட்சம் டோஸ்கள் அடுத்த3 நாட்களுக்குள் மாநிலங்களுக்கு சென்றடையும்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x