Published : 29 Apr 2021 08:05 PM
Last Updated : 29 Apr 2021 08:05 PM

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தகவல்

அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைபற்றும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.

இந்தநிலையில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பின்படி இந்திய டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் பாஜக 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் அணி 45 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x