Published : 29 Apr 2021 06:58 PM
Last Updated : 29 Apr 2021 06:58 PM

முடிந்தது மேற்குவங்க தேர்தல்; மே 2-ம் தேதி 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை

மேற்குவங்க சட்டப் பேரவைக்கான 8-ம் கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று இறுதிகட்ட தேர்தல் 35 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 8-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3.30 மணி வரை 68.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்குவங்க சட்டப் பேரவைக்கான 8-ம் கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x