Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

விண்ணில் எதிரி இலக்கை தாக்கும் பைதான் 5 ஏவுகணை சோதனை வெற்றி

ஹைதராபாத்

விண்ணில் எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பைதான் 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் சார்பில்ஏவுகணைகளின் தாக்குதல் திறன்அவ்வப்போது பரிசோதிக்கப்படும். அதன்படி, பைதான் 5 ஏவுகணை கோவா கடற்பகுதியில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத் தில் இருந்து செலுத்தப்பட்ட பைதான் 5 ஏவுகணை வானில்இருந்து விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) முதல் முறையாக இந்தஏவுகணை சோதனையை நடத்தி முடித்துள்ளது.

கோவா கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை பைதான் 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை சோதனை வெற்றிக்காக அதிகாரிகளுக்கும் விஞ்ஞானி களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x