

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இன்று முதல் (28-ம் தேதி) கோ-வின் போர்டல், ஆரோக்கிய சேது, உமாங் (UMANG app) செயலியில் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்டுவார்கள். அந்தச் செயலியில் எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
கோ-வின் போர்டலில் பதிவு செய்வது எவ்வாறு?
ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?
செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை