Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா முன்கள பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம்: ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி

கரோனா முன்களப் பணியாளர் களுக்கு கூடுதலாக ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. அங்கு தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

இதனால் அங்குள்ள மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், “கரோனா பேரிடர் காலத்தில் தங்கள் குடும் பத்தையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் சேவையைபாராட்டும் விதமாக, மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆங்காங்கே போராட்டம்

இதனிடையே, ஜார்க்கண்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பலருக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x