100 நாட்களில் 14.19 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி

100 நாட்களில் 14.19 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி
Updated on
1 min read

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் 14.19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 20,44,954 முகாம்களில்‌ 14,19,11,223 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

100-வது நாளான நேற்று (ஏப்ரல் 25, 2021), நாடு முழுவதும் 9,95,288 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,04,382 ஆக (82.62%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,272 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 74.5 சதவீதம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66,191 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35,311 பேரும், கர்நாடகாவில் 34,804 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 28,13,658 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 16.25 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.13 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in