Published : 24 Apr 2021 10:21 AM
Last Updated : 24 Apr 2021 10:21 AM

கரோனா பாதிப்பு புதிய உச்சம்;  ஒரே நாளில் 3,46,786 பேருக்கு  தொற்று: 2,624 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி

இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,624 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக3,46,786 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,66,10,481 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 25,52,940 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 1,38,67,997 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,19,838 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,89,544 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 13,83,79,832 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x