Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் டெல்லி மருத்துவமனைகள் திணறுகின்றன. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்று டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது.
இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் நேற்று கூறும்போது, “டெல்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 370 மெட்ரின் டன்னில் இருந்து 480 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது. தேவை அதிகமாக இருப்பினும் இந்த அளவுக்கு ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.
கேஜ்ரிவால் மேலும் கூறும்போது, “டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்தே இங்கு ஆக்சிஜன் வருகிறது. இது நிறுத்தப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் வழிகாட்டுதலின்படி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT