Published : 22 Apr 2021 12:29 PM
Last Updated : 22 Apr 2021 12:29 PM

ஹாட் லீக்ஸ்: ஃப்ளைட் டிக்கெட் அனுப்புறோம்... ஓட்டுப்போட வாங்க!

உபியில் ஏப்ரல் 15 தொடங்கி நான்கு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுகின்றன. இம்முறை காங்கிரஸ் கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் என சொல்லப்படும் நிலையில், டெல்லியை ஒட்டியுள்ள கவுதம் புத் நகர் மாவட்ட கிராமங்களில் உள்ளாட்சி வேட்பாளர்கள் லட்சங்களைக் கொட்டி செலவு செய்கிறார்கள். ஒன்றிரண்டு வாக்குகளில்கூட இங்கு வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும் என்பதால் ஒவ்வொரு ஓட்டையும் கவனமாகச் சேகரிக்கிறார்கள் வேட்பாளர்கள். இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் லிஸ்ட் எடுத்து அவர்கள் வந்து செல்வதற்கான விமான போக்குவரத்துச் செலவைக் கவனித்துக் கொள்வதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்களாம் ஒருசில வேட்பாளர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x