Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM

இது கடைசி ‘குட் மார்னிங்’ ஆக இருக்கலாம்: முகநூலில் பதிவிட்ட டாக்டர் உயிரிழந்தார்

மும்பை

மும்பை ஷிவ்ரி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மனீஷா ஜாதவ் (51). காசநோய் சிகிச்சை நிபுணரான மனீஷா, கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது முகநூல் பதிவில், தான் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் “இதுவே எனது கடைசி ‘குட் மார்னிங்’ ஆக இருக்கலாம்” என பதிவிட்டார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமூக வலைதளங்களில் பல்வேறு மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் கரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தங்கள் அனுபவங்கள் மற்றும் கவலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். மும்பையைச் சேர்ந்த திருப்தி கிளாடா என்ற மருத்துவர் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வைரலானது.

“நாங்கள் உதவியற்றவர்களாக உள்ளோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. மக்கள் பீதியடைகிறார்கள். நான் மனம் உடைந்துள்ளேன்.

எனது கவலைகளை உங்களிடம் சொல்வதால், நீங்கள் நிலைமையை புரிந்துகொள்ள உதவினேன் என்ற முறையில் நான் மனம் அமைதி அடைவேன்” என்றுஅவர் கண்ணீர்மல்க கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x