Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM
பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:
கடந்த ஆண்டு கரோனா தொற்றால் ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜகவினர் உணவும் மருந்துகளும் கொடுத்து உதவினர். இப்போதும் கரேனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டும். மக்களுக்கு முகக் கவசங்கள், சானிடைசர்கள் அளிக்க வேண்டும். கரோனா பாதிப்பில் இருந்து மீள உதவ வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் விளக்கி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு செல்ல உதவி தேவைப்படுவோருக்கு பாஜகவினர் உதவ வேண்டும்.
இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT