Published : 20 Apr 2021 05:00 PM
Last Updated : 20 Apr 2021 05:00 PM

12.71 கோடியைக் கடந்தது கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை

புதுடெல்லி

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12.71 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 18,83,241 முகாம்களில்‌ 12,71,29,113 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 32 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

94-வது நாளான நேற்று (ஏப்ரல் 19, 2021), நாடு முழுவதும் 32,76,555 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 77.67 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 58,924 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 28,211 பேரும், டெல்லியில் 23,686 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 20,31,977 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 13.26 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,08,582 ஆக (85.56%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாகக் குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x