Published : 20 Apr 2021 12:03 PM
Last Updated : 20 Apr 2021 12:03 PM

தொடங்கியது 6 நாட்கள் லாக்டவுன்; வெறிச்சோடியது டெல்லி

டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் 6 நாட்களுக்கு முழுமையாக லாக்டவுன் தொடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் தொடர்ந்து கரோனாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது. முகக்கவசம் இல்லாமல் வெளியே சென்றால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் கிழமை காலை 5 மணிவரை 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள், உணவு, மருத்துவ சேவைகள் தொடர்ந்து இயங்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை.

இந்தநிலையில் லாக்டவுன் தொடங்கியுள்ளதால் டெல்லியில் சாலைகள் வெறிசோடியுள்ளன. வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x