Last Updated : 17 Apr, 2021 03:13 AM

 

Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கரோனா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வுக்கு (78) ஏற்கெனவே க‌டந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு, 8 நாட்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

அதன்பின் கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். கடந்த 3 நாட்களாக மாஸ்கி, பெலகாவி ஆகிய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து செவ்வாய்க் கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அதில் தொற்று இருப்பதற்கான அறிகுறி கள் எதுவும் தென்படவில்லை.

இதனால் எடியூரப்பா நேற்று காலையில் அமைச்சர்கள், க‌ரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புதிய கட்டுப்படுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க வரும் 18ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்ட இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் நேற்று பிற்பகலில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வ‌ருகிறது.

எடியூரப்பாவின் மகள் பத்மாவதிக் கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், பரிசோதனை களையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x