Published : 23 Dec 2015 08:42 AM
Last Updated : 23 Dec 2015 08:42 AM
மகாராஷ்டிராவில் கடந்த காங் கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது சஜன் புஜ்வால் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். அவரது குடும்பத்தினர் பர்வேஸ் கன்ஸ்ட் ரக்சன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதில் சஜன் புஜ்வால் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இயக் குநர்களாக உள்ளனர்.
டெல்லியில் மகாராஷ்டிர இல்லம் கட்டப்பட்டபோது அப்போ தைய அமைச்சர் சஜன் புஜ்வால் பல கோடி ரூபாய் மோசடி யில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புப் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முதலில் பர்வேஸ் கன்ஸ்ட் ரக்சன்ஸ் நிறுவனத்தின் ரூ.17 கோடி மதிப்புள்ள சொத்துகளும் அதைத் தொடர்ந்து ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.
தற்போது 3-வது முறையாக மும்பையில் உள்ள 2 கட்டிடங்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. அவற்றின் மதிப்பு ரூ.110 கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT