Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லை. இதனால். அகமதாபாத் கத்தோலிக்க டயோசீஸ் (திருச்சபைகளை நிர்வகிக்கும் அமைப்பு) தங்கள் சபையை சார்ந்த மக்களுக்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளது.
அதில், ‘‘கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுமாறு அறிவுறுத்து கிறோம். இதுபோன்ற பேரிடர் காலத்தில் வேறு வழியின்றி இதனை செய்வதால், எந்த விதத் திலும் இறந்தவர்களின் இறை நம்பிக்கையை இது பாதிக்காது’’ என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT