Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

இந்தியாவில் 11 கோடியை கடந்தது தடுப்பூசி விநியோகம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகம் 11 கோடியைக் கடந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நான்கு நாள் தடுப்பூசி விநியோக விழாவை மத்தியஅரசு நடத்தியது. ஏப்ரல் 11-ம்தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நான்கு நாட்களில் மட்டுமே 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11.1 கோடியாக உள்ளது.

இதில் மருத்துவ துறை சார்ந்த பணியாளர்களில் 90.4 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 55.8 லட்சம் பேர் இரண்டாம் டோஸ்தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்களில் 1.01 கோடி பேர் முதல்டோஸ் தடுப்பூசியையும், 50 லட்சம்பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயது வரையிலான மக்களில் 3.55 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 8.17 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கும் மேற்பட்டோரில் 4.24 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 24.6 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x