Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை எலெக்ட்ரானிக் முறையில் செலுத்தவசதியாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் கானபுரேசார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கடுமையான அபராதம விதிக்கும் மத்திய அரசின் முடிவு விதி மீறல் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசு தாக்கல்செய்திருந்த பிரமாண பத்திரத்தில், எலெக்ட்ரானிக் சிப் எனப்படும் பாஸ்டேக் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்து அதை கட்டாயமாக்கியது. இதனால் வாகனங்கள் காத்திருப்புநேரம் குறைந்தது. இந்த நடைமுறையானது மத்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி முதல் பாஸ்டேக்கட்டாயமாக்கப்பட்டது. இவ்விதம் பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து பணியாளர்கள் வாகன நெரிசலை தவிர்க்க ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வதால், சீரான போக்குவரத்துக்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT