Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
தேர்தல் ஆணையர்களில் பணி மூப்பு அதிகம் கொண்டவர் என்ற அடிப்படையில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் 24-வது தலைமை ஆணையராக சுஷில் சந்திரா நேற்று டெல்லியில் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் 2022-ம் ஆண்டு மே 14-ம்தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் மூலம் கோவா, மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் சுஷில் சந்திரா தலைமையில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT