Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள குசம்பா கிராமத்தில் படுக்கைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலர், கீழே வீசப்பட்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை சேகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார் தீவிரமாக கண்காணித்து நேற்று அதிகாலை அந்த தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு தயாரிக்கப்படும் படுக்கைகளில் பஞ்சுகளை வைப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் வைக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அந்த ஆலைக்கு சீல் வைத்து ஆலையின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையில் டன் கணக்கில் இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை மகாராஷ்டிராவில் தான் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களில் படுக்கைகள் தயாரிப்பது கொடுமை. இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT