Published : 18 Dec 2015 10:56 AM
Last Updated : 18 Dec 2015 10:56 AM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் லோஹர் தகா சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள் ளது. இது ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொகுதியில் கடந்த 14-ம் தேதி பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் சுக்தியோ பகத் 73,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, பாஜக ஆதரவு பெற்ற அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு வேட்பாளர் நீரு பகத்துக்கு 50,571 வாக்குகள் கிடைத்தன.
இந்தத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த நீரு பகத்தின் கணவர் கம்லா கிஷோருக்கு, மிரட்டி பணம் பறித்த வழக்கில் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அந்த இடம் காலியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT