Published : 12 Apr 2021 01:34 PM
Last Updated : 12 Apr 2021 01:34 PM

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி திருவிழா: ஒருநாள் சராசரி 40 லட்சம்: மொத்த எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்வு

புதுடெல்லி

தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று30 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 10,45,28,565 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,27,717 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,70,179 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,21,56,529 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பரவல் தொடர்ந்து மகாராஷ்டிராவில் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 63,294 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகஅளவில் பாதிப்பு காணப்படுகிறது.

இந்தநிலையில் கரோனா பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் சராசரியாக, நாள் ஒன்றுக்கு 38,34,574 தடுப்பூசிகள் போடப்படுவதால் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மகாத்மா ஜோதிபா புலேவின் பிறந்த நாளான நேற்று முதல், பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தடுப்பூசி திருவிழா நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.

தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 30 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால் இதுவரை 10,45,28,565 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒரு நாள் சராசரி என்பது 40 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இது உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x