Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

கரோனா பரவல் அதிகரிப்பு: போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள்

புதுடெல்லி

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கத்தின் தலைவர் ஷிவ்குமார் காக்கா கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றால், விவசாயிகளுக்கு மத்திய அரசு முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும். அறிக்கை வெளியிடுவதன் மூலம் எந்தப் பலனும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x