Last Updated : 11 Apr, 2021 11:05 AM

 

Published : 11 Apr 2021 11:05 AM
Last Updated : 11 Apr 2021 11:05 AM

நாடு முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,52,879 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,52,879 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,81,443 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், இந்தியாவில் இதுவரை 25,66,26,850 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 14,12,047 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை 10,15,95,147 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x