Published : 14 Dec 2015 07:41 PM
Last Updated : 14 Dec 2015 07:41 PM
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஜி.எஸ்.டி. மசோதாவை அடுத்த ஆண்டில் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் 3 முக்கிய திருத்தங்களை நீக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதால் எவ்வித முடிவு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து மற்றொரு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அருண் ஜேட்லி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள பதிவில், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை காங்கிரஸ் முடக்கியது, அதேபோல தற்போது குளிர்கால கூட்டத்தொடரையும் அந்தக் கட்சி முடக்கி வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT