Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12-ம் தேதி முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று மாலை அறிவித்தது.
ஆந்திராவில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 11-ம் தேதி 6 மணிவரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், 12-ம் தேதி முதல் இலவச தரிசனம் (தர்ம தரிசனம்) முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால், ரூ. 300 ஆன்லைன் டோக்கன் தரிசனம், விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT