Published : 04 Apr 2021 03:19 PM
Last Updated : 04 Apr 2021 03:19 PM

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 7.5 கோடியை கடந்தது

புதுடெல்லி

நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி வரை போடப்பட்ட கோவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 7,59,79,651 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6.5 கோடி (6,57,39,470). 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியை (1,02,40,181) கடந்தது.

78வது நாளான நேற்று மொத்தம் 27,38,972 தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.96 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கோவிட் பாதிப்பு 49,447-ஆக உள்ளது. 12 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,91,597. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,16,29,289- எட்டியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 93.14 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில், 60,048 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x