Last Updated : 04 Apr, 2021 03:15 AM

 

Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

கரோனா ஊரடங்கால் டெல்லி இளைஞர் ஆத்திரம்- சிலைகளை சேதப்படுத்தியதால் கைது

டெல்லி பஷ்சிம்புரி பகுதியில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவி கோயில். இங்கு வழக்கம் போல் அதிகாலையில் பணிக்கு வந்த கோயில் பண்டிதர் ராம் பாதக், கருவறையில் இருந்த சிலைகள், வெளியே கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோயிலின் சுவர் பகுதியிலும் சேதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து பஷ்சிம்புரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கோயிலில் சேதம் ஏற்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த விக்கி (28) என்ற இளைஞர்தான் என்பதை கண்டுபிடித்தனர். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீஸாரிடம் விக்கி கூறும்போது, “கரோனா ஊரடங்கால் எனது வேலை பறிபோனது. பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இதற்கு கடவுள்தான் காரணம் என்று கருதி கோயிலில் நுழைந்து சிலை களை சேதப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விக்கியை கைது செய்த போலீஸார், அவரது மனநலம் குறித்து அறிய அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x