Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM

பிஹார், ஜார்க்கண்டில் மருத்துவ சேவைக்கு இந்திய-அமெரிக்க தம்பதி ரூ.1 கோடி நன்கொடை

இந்திய அமெரிக்கர்களான ரமேஷ் - கல்பனா தம்பதி, இலவச மருத்துவ சேவைக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

இந்திய அமெரிக்க மருத்துவர்கள் இணைந்து பிஹார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஏழை எளியமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் பிரவாஸி அலும்னிநிஷுல்க் என்ற திட்டத்தைத்தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தில் ராஞ்சியில் மருத்துவர்கள் இணைந்துஇலவச கிளினிக் நடத்திவருகின்றனர். மாநிலம் முழுவதும்ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்கும் இலக்கும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மருத்துவ செயல்பாடுகளுக்காகத் தற்போது ரமேஷ்-கல்பனா பாட்டியா குடும்ப அறக்கட்டளை ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது.இந்த நிதி பிரவாஸி அலும்னி நிஷுல்க் திட்டத்தின் இலக்கை எட்டுவதற்கு உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x