அல்வா பார்ட்டி.. பட்ஜெட் பணி ஆரம்பம்! 200 பணியாளர்களுக்குச் ‘சிறை’: நிதியமைச்சருக்கும் மூன்றுகட்ட சோதனை

அல்வா பார்ட்டி.. பட்ஜெட் பணி ஆரம்பம்! 200 பணியாளர்களுக்குச் ‘சிறை’: நிதியமைச்சருக்கும் மூன்றுகட்ட சோதனை
Updated on
2 min read

மத்திய பட்ஜெட்டை அச்சடிப்பதற் காக ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பணியாளர்கள் விரும்பி ‘சிறை’செல்கிறார்கள். நிதியமைச் சர் அருண்ஜேட்லியும் மூன்றுகட்ட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

ஜூலை 7-ம் தேதி நாடாளு மன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 8-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 9-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

10-ம் தேதி 2014-15 -ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் அச்சடிப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, டெல்லி போலீஸ், மத்திய உளவுத்துறையினர் ஆகியோர் கொண்ட மூன்று அடுக்குப் பாது காப்பு அளிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப் படுகிறது. நிதி அமைச்சக அலுவலர் கள் உட்பட அச்சடிப்புப் பணி யில் ஈடுபடும் சுமார் 200 பேர் மற்றும் பணியாளர்கள் பட் ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை சுமார் 15 நாள்களுக்கு ’சிறை’வைக் கப்படுகிறார்கள்.

நிதித்துறையின் இணைச் செய லாளர் (பட்ஜெட் பிரிவு) ரஜத் பார்கவா தலைமையில் நடைபெறும் பணி திங்கள்கிழமைமுதல் தொடங் கப்பட உள்ளது. இவருக்கு முன் அந்தப் பணியை இணைச்செய லாளராக இருந்த தமிழர் சக்திகாந்த் தாஸ் ஏற்றிருந்தார்.

பட்ஜெட் அச்சடிப்புப் பணியின் ருசிகர ரகசியங்கள் குறித்து ‘தி இந்து’ விடம் நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

‘ஆங்கிலேயர் காலம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை யில் பட்ஜெட் பிரதிகள் அச்சிடப் பட்டு வந்தன. அதில் சில பக்கங் கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு முன்பாக வெளியில் கசிந்த தால் அருகிலுள்ள வடபகுதி கட்டிடத் துக்கு மாற்றப்பட்டது’ எனக் கூறு கின்றனர். நிதித்துறை அலுவலர்கள் விரும்பி ஏற்கும் இந்தச் ‘சிறை’ யில் சுமார் 16 நாள்களுக்கு தனித் தீவாக வாழ வேண்டும். இடையில் ஏதேனும் கட்டாயம் ஏற்பட்டால் குடும்பத்தாருடன் தொலைபேசி யில் ஸ்பீக்கரில் மட்டுமே பேச முடியும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பணிக் காலத்தில் காலை யில் விழிப்பது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள் ளேயே வாழ வேண்டும். தேநீர் முதல் உணவு வரை தேவையான பண்டங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும்.

இந்த கதவுகளுக்குள் பாது காப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை. சில நேரங்களில் ஊழியர் களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்பில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

பட்ஜெட் பணிகளைத் தொடங் கும் முன்பு ‘அல்வா பார்ட்டி’என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத அரசு விருந்து அளிக்கப்படுகிறது.

புனித யாத்திரைக்கு புறப்படுபவர்களை வழியனுப்ப அவரது குடும்பத்தார் செய்யும் சடங்குபோல் இந்த விருந்து அமைகிறது. சிலநேரம் மத்திய நிதியமைச்சரும் “அல்வா பார்ட்டி”யில் கலந்து கொள்வாராம். இந்த வழக்கம் ஆங்கிலேயர் காலத் தில் இருந்ததாகத் தெரியவில்லை.

பட்ஜெட் அச்சடிப்புப் பணி களை மேற்பார்வையிட வரும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோத னைகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்போது மொபைல், லேப் டாப் உட்பட எந்தவிதமான எலக்ட் ரானிக் சாதனங்களையும் அமைச் சர் பயன்படுத்த அனுமதியில்லை.

கடைசி கட்டமாக அமைச்சரின் உரை மற்றும் செய்திக்குறிப்புகள் அச்சடிக்கப்படும். இவற்றை தயார் செய்ய மத்திய அரசின் செய்தி தொடர்புத் துறை அதிகாரிகள் சிலரும் ஓரிரு நாள்கள் ‘சிறைபட” வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் நடைமுறை மாற்றம்

ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் லண்டனின் விடியல் நேரத்தை மனதில் வைத்து மாலை ஐந்து மணிக்கு பட்ஜெட் தாக் கல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத் துக்கு பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது. கடந்த 2001- ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆங்கிலேயர் நடைமுறையை மாற்றினார். இந்திய நாட்டின் பட்ஜெட்டை நமது நேரத்துக்கு ஏற்ப காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in