Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
ஆதார் - பான் கார்டு இணைப் பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பைமத்திய வருமான வரித்துறைட்விட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் - பான் இணைப்புக்கான காலக் கெடு மார்ச் 31 வரை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை இணையதளத்தில் சில தொழில்நுட்ப இடையூறுகள் உள்ளதால் ஆதார் - பான் இணைப்பில் சிக்கல் நிலவுவதாக பலர் தெரிவித்ததைத் தொடர்ந்து இத்தகைய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT