Last Updated : 22 Nov, 2015 11:15 AM

 

Published : 22 Nov 2015 11:15 AM
Last Updated : 22 Nov 2015 11:15 AM

ஸ்ரீநகர் சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் புறநகர் பகுதியில், பாரமுல்லா செல்லும் சாலையில் வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டுபிடித்து அழித்தனர்.

மத்திய ரிசர்வ் போலீஸின் ரோந்துப் படையினர் லவேபோரா என்ற இடத்தில் ஒரு பாலத்துக்கு அடியில் மர்ம பை இருப்பதை கண்டனர். அதில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்ததும், உடனடியாக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் இந்த வெடிகுண்டு பத்திரமாக அகற்றப்பட்டு, அருகில் உள்ள வயல்வெளியில் வெடிக்குமாறு செய்யப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்து மிகுந்ததாக ஸ்ரீநகர் பாரமுல்லா சாலை உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் வெடிகுண்டு இருப்பது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே தெற்கு காஷ்மீர், அனந்தநாக் மாவட்டம், பிரக்போரா என்ற இடத்தில் சாக்குப் பையில் இருந்த 2 பீரங்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்கு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x