Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

முகேஷ் அம்பானியை மிரட்டிய விவகாரம்- போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிப்பு

மும்பை

தொழிலதிபர் முகேஷ் அம்பா னிக்கு மிட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடிக்கும்தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதோடு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர். முகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்ட காரின் உரிமையாளர் புனேவை சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த கார் ஒரு வாரத்துக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகவும் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் போலீஸில் தெரிவித்தார். திடீர் திருப்பமாக கடந்த 5-ம் தேதி புனேவில் உள்ள நீரோடையில் மான்சுக் ஹிரனின் உடல் மீட்கப் பட்டது. இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது மனைவி புகார் அளித்தார்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல் நடவடிக்கையாக மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் கைது செய்யப்பட்டார்.

நீரோடையில் சடலமாக மீட்கப்பட்ட மான்சுக் ஹிரனும், சச்சின் வாஸும் நண்பர்கள் என் பதும் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை, சச்சின் வாஸ் பயன்படுத்தி வந்த தும் என்ஐஏ விசாரணையில் அம்பலமானது.

சச்சின் வாஸிடம் இருந்து இதுவரை 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்திய 6-வது காரை என்ஐஏ கண்டுபிடித்து நேற்று முன்தினம் பறிமுதல் செய்தது. சச்சின் வாஸ் 13 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் 5 செல்போன்களை உடைத்து அழித்துள்ளார்.

அவர் தனது அலுவலகத்தில் பயன்படுத்திய மடிக்கணினியை காணவில்லை. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு மடிக் கணினி மற்றும் முக்கிய மின்னணு சாதனங்களை மும்பையில் உள்ள மீத்தி நதியில் சச்சின் வாஸ் வீசியிருப்பது தெரிய வந்தது.

இதன்பேரில் நேற்று முன்தினம் பிற்பகலில் 10 நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் மீத்தி நதியில் தேடும் பணி நடைபெற்றது. அப்போது, சச்சின் வாஸ் பயன்படுத்திய மடிக்கணினி, அச்சு இயந்திரம், 2 வாகன எண் பலகைகள், 2 சிபியு, 2 டிவிஆர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. மடிக் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆராய்ந்தால் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x