Published : 26 Nov 2015 10:12 AM
Last Updated : 26 Nov 2015 10:12 AM

எந்த சூழ்நிலையிலும் இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற மாட்டார்கள்: எம்.பி. ஒவைசி ஆவேசம்

இந்தியவாழ் முஸ்லிம்கள் எந்த சூழலிலும் தாங்கள் பிறந்த இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என அகில இந்திய மஸ்லீஸ்-இ-இதஹாதுல்முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியின் தலைவரும் எம்.பியு மான அசாதுதீன் ஒவைசி ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் ஆமீர்கான் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியவாழ் முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் பிறந்த இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் கிளப்பிவிடும் இத்தகைய கீழ்த்தரமான அரசியலுக்கு முஸ்லிம்கள் அடிபணிய மாட்டார்கள். ஒரு நடிகருக்கு ஆதரவாக பேசுகிறேன் என எடுத்து கொள்ள கூடாது. நான் இந்திய வாழ் முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த பூமியும், கண்டமும் உருவான முதற்கொண்டு இங்கு முஸ்லிம் வாழ்ந்து வருகிறான். சில இந்து அமைப்புகள் எங்களை மன ரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் இப்படி பேசி வருகின்றன.

இவ்வாறு ஒவைசி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x