Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோலி பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் பதவி விலகினார்.
இந்நிலையில் கர்நாடக சட்டப் பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அவையில் அந்தரங்க வீடியோ விவகாரத்தை கிளப்பினர். சித்தராமையா கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்து, ரமேஷ் ஜார்கிஹோலியை முதல்வர் எடியூரப்பா காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டதால் அவைநாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை நேற்று தொடங்கியதும் தொடங்கியதும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறும்போது, “கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே ஜார்கிஹோலி விவகாரத்தை காங்கிரஸார் விவாதித்துள்ளனர். அந்த விவகாரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் இருப்பதால் இப்போது விவா திக்கத் தேவையில்லை. தார்மீகஅடிப்படையில் ரமேஷ் ஜார்கிஹோலி பதவி விலகியுள்ளார்.சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 5 முறைபோலீஸார் நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் ஜார்கிஹோலி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யக் கோருவது தவறானது. அவையின் நேரத்தை காங்கிரஸார் வீணடிக்கின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT