

நாட்டில் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநிலங்களுக்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆடி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சையைத் துரிதப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட வயதினருக்குத் தடுப்பூசி போடுதலை வேகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், டெல்லி,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேலாக கரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பல்வேறு நகரங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.