Published : 04 Nov 2015 08:43 AM
Last Updated : 04 Nov 2015 08:43 AM

உ.பி. பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டம் தண்டேபூர் கிராமத்தில் இத்ரிஸ் என்பவர், சிறிய அளவில் பட்டாசு தொழிற்கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது தொழிற்கூடத்தில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில், இத்ரிஸின் மனைவி ஜைபுன்னிசா (50) மற்றும் அவரது உதவியாளர் புபேந்திரா (14) ஆகியோர் உயிரிழந்தனர்.

இத்ரிஸின் மகள் ஷப்னம் (25), மகன் ஷானு (18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராம்முரத் யாதவ் கூறும்போது, “பட்டாசு தயாரிக்க இத்ரிஸ் முறையான உரிமம் பெற்றுள்ளார். வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள் ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x