Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் சரியாக செயல்படாத அரசு அதிகாரிகள் 170 பேருக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகள் அளித்துள்ள தகவலின்படி கடந்த 2 ஆண்டுகளில் குரூப்-ஏ அதிகாரிகள் 90 பேர் மற்றும் குரூப்-பி அதிகாரிகள் 80 பேருக்கு எதிராக அடிப்படை விதி 56(ஜே)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊழல், செயல்படாதிருத்தில் மற்றும் பிற காரணங்களுக்காக எந்தவொரு ஊழியருக்கும் பொதுநலன் அடிப்படையில் முன்கூட்டியே ஓய்வு அளித்திட அரசுக்கு அடிப்படை விதி (56)ஜே அனுமதி அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT