Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

ராணுவ வீரர்களின் வீரத்தை பாராட்ட வார்த்தை இல்லை: நாடாளுமன்ற நிலைக்குழு பெருமிதம்

புதுடெல்லி

லடாக் எல்லையில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை தீவிரமானது இதை அடுத்து ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர்.

இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் கணிசமான வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், "கல்வான் தாக்குதலில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. மேலும் உயிரிழந்த, காயமடைந்த வீரர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் அளவில்லாத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்திய ராணுவம் தேச நலனைப் பாதுகாப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வருவதில் ராணுவத்தின் பங்கு அளப்பரியது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வீரர்கள் தொடர்ந்து தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர்.

பட்ஜெட் கணிப்பில் ராணுவத்துக்கு ரூ.51,492.10 கோடி நிதி தேவை இருக்கும்பட்சத்தில் ரூ.36,531.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் ராணுவத்தில் தேவையில்லாத பிரிவுகளில் ஆட்களைக் குறைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x