Last Updated : 13 Mar, 2021 05:47 PM

 

Published : 13 Mar 2021 05:47 PM
Last Updated : 13 Mar 2021 05:47 PM

கரோனா பரவல் காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் 50% அதிகரித்தது எப்படி?- ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் அனைவருமே கஷ்டப்பட்டபோது, அதானியின் சொத்து மதிப்பு மட்டும் 50 சதவீதம் அதிகரித்தது எப்படி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ப்ளும்பெர்க் வெளியிட்ட 2020ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார்.

உலகின் முதலிடத்தில் உள்ள பணக்காரர் என்ற இடத்துக்குப் போட்டியிட்ட அமேசானின் ஜெஃப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்த ஆண்டு அதானி குழுமப் பங்குகளில் ஒன்றைத் தவிர அனைத்தும் 50 சதவீத வளர்ச்சி கண்டன. அதே சமயம் முகேஷ் அம்பானி இந்தச் சமயத்தில் சுமார் 58,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அதானி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது குறித்த நாளேடு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "2020ஆம் ஆண்டில் உங்கள் சொத்து எவ்வளவு அதிகரித்தது? கரோனா வைரஸ் பரவல் காலத்தில் வாழ்க்கையை வாழவே போராடினீர்களே? ஆனால், அதானி, ரூ.12 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். இதன் மூலம் அதானியின் சொத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏன் அதிகரித்தது எனச் சொல்ல முடியுமா?" எனக் கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x