Published : 13 Mar 2021 03:11 AM
Last Updated : 13 Mar 2021 03:11 AM
கடந்த பிப்ரவரி 25-ம் தேதிதொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதனுள் 20-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அந்தக் காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்நிலையில் டெலிகிராம் சேனலில் இந்த சம்பவத்தில் திஹார்சிறையில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) தீவிரவாதியான தெஹ்சீன் அக்தரின் மொபைல் போன் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
2014-ம் ஆண்டு பாட்னாவில் மோடி பங்கேற்ற பேரணியில் சதி வேலையில் ஈடுபட்டதோடு தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமான தெஹ்சீன்அக்தர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் மற்றும் புத்த கயாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இவருக்கு தொடர்புண்டு.
டெலிகிராம் செயலி மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கென டார் பிரவுசர் மூலம் கணக்கு தொடங்கி தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிப்ரவரி 26ம் தேதி டெலிகிராம் சேனலில் இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக தகவல் வெளியானது.
தகவல் வெளியான மொபைல் போன் இருப்பிடம் குறித்து சைபர்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது அது டெல்லி திஹார்சிறையிலிருந்து வெளியிடப்பட் டுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக கைப்பற்றப் பட்ட மொபைல் போனை போலீஸார் கைப்பற்றி ஹெஹ்சீன் அக்தரை ரிமாண்டில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த இரண்டு மொபைல் எண்களுமே போலியான ஆவணங்கள் அளித்து பெறப்பட்டவையாகும். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த வாரம் எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT