இந்தியாவை பிணைக்கும் சர்வாதிகார சக்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார்

குஜராத் மாநில காங்கிரஸ் சார்பில் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி யாத்திரை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி காங்கிரஸ் தொண்டர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பு நேற்று தண்டி யாத்திரையை தொடங்கினர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. படம்: பிடிஐ
குஜராத் மாநில காங்கிரஸ் சார்பில் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி யாத்திரை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி காங்கிரஸ் தொண்டர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பு நேற்று தண்டி யாத்திரையை தொடங்கினர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. படம்: பிடிஐ
Updated on
1 min read

நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது, அவர்கள் விதித்த உப்பு வரிக்கு எதிராக மகாத்மா காந்தி தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு, தண்டி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்நாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட முகநூல் பதிவில், “ஆர்எஸ்எஸ் தலைமையிலான சர்வாதிகார சக்திகளால் இந்தியா பிணைக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான சுதந்திரத்துக்காக நமது தனிப்பட்ட கடமைகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காந்திஜியின் முன்மாதிரி போராட்டத்தால் நாம் வழிநடத்தப்பட்டு, சுதந்திரத்துக்கான அணிவகுப்பை தொடருவோம். ஜெய் ஹிந்த்!” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “மாணவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கு போலீஸ் தடியடி, தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டுவது, தேசவிரோத முத்திரை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றையே மத்திய அரசு வழங்குகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in