Published : 30 Nov 2015 01:00 PM
Last Updated : 30 Nov 2015 01:00 PM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து பரிசோதனைகளை மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா: "தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு வாரத்தில் இந்தியா திரும்புவார்" எனக் கூறியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக அவர் மேற்கொள்ள வேண்டியிருந்த மருத்துவ பரிசோதனை தள்ளிப்போனதாகவும் அதனால் அவர் தற்போது பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT