Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM
: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவரால் துடிப்புடன் செயல்பட இயலவில்லை. எனவே, முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் இப்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. ராகுல் காந்தி, கட்சிக்கு தலைமை ஏற்றால், நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள். அத்துடன் இவரது தலைமையின் கீழ் கட்சி வலுவடையும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT