Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

இந்தியா- வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் மோடி

இந்தியா - வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசு இல்லையோ அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அல்லது மந்தமாக செயல்படுத்தப்படுவதை பார்க்க முடியும். உங்கள் பக்கத்து மாநிலத்திலேயே இந்த நிலைதான் உள்ளது. ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட திரிபுரா அரசு, மாநில மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த திரிபுரா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x