Published : 09 Mar 2021 11:10 AM
Last Updated : 09 Mar 2021 11:10 AM

2.30 கோடி பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

நாடு முழுவதும் 2.30 கோடி பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் கோவிட் தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 86 சதவீதம் இந்த 6 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 15,388 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும் இரண்டாவத இடத்தில் கேரளாவிலும் தினசரி தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,87,462ஆகப் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் 3,57,478 முகாம்களில்‌ 2.30 கோடி பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x