Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM
டெல்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட் டர் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆரிஸ் கான் உள்ளிட்டோர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2008 செப்டம்பர் 13-ம்தேதி டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அடுத்த 6 நாட்களில் (19-ம் தேதி) பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகளும் காவல் ஆய்வாளர் மோகன் சந்த் சர்மாவும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடை பெற்றது. போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆரிஸ் கான் (அப்போது தலைமறைவானவர்) இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி ஷாஜாத் அகமது, ஆடிப் அமீன் மற்றும் முகமது சஜித் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனிடையே, 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆரிஸ் கான் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்தீப் யாதவ் வழங்கிய தீர்ப்பில், “என்கவுன்ட் டரின் போது காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் ஆரிஸ் கான் உள்ளிட்டோர் மீதான குற்றச் சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள் ளன. எனவே, அவர்கள் அனை வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகிறது. இவர் களுக்கான தண்டனை விவரம் பற்றிய விசாரணை வரும் 15-ம்தேதி நடைபெறும்” என கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT