Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

பழைய வாகனங்களை அழித்தால் புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5% தள்ளுபடி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங் களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன் பாட்டில் இருக்கும் தனிநபர்களுக்கான வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலானவாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இந்நிலையில் பழைய வாகனங்களை அழிக்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வாகனங்கள் வாங்கும் போது 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்தால் இந்திய வாகனத் துறையின் வருவாய் 30 சதவீதம் அளவு உயரும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார். ‘தற்போது இந்திய வாகனத் துறையின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் வாகனத் துறையில் ரூ.10,000 கோடி அளவில் புதிய முதலீடு களும், 50,000 அளவில் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x